யார் யார் சிவம்
நீ நான் சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் x 4
(யார்..)
இதயம் என்பது சதைதான் என்றால் எறித்தால் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம்
நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
(அன்பே..)
(யார்..)