லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
(லேசா..)
நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
(லேசா..)
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
(லேசா..)